SEP 2025

                                          தெற்கு மண்டலம்

செப்டம்பர் 16  ஜார்ஹா மற்றும் லடாக் பணித்தளங்களில் 130 சிறுவர் சிறுமியருக்கு வசனங்கள் மற்றும் வேதாகம கதைகளின் மூலமாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். மேலும், டோர்பா,  லோஹிங்கா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற ஜெபக்கூடுகைகளையும், போச்ரா பணித்தளத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற உபவாச கூடுகையினையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். இப்பணித்தளங்களில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஞாயிறு பள்ளிகளுக்காக ஜெபிப்போம்.

செப்டம்பர் 17 ஆகஸ்ட் 23 அன்று ஹைடர்நகரில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 90 பேர் பங்கேற்றனர். சகோ. சுரேந்தர், சகோ. சஞ்சய், சகோ. க்யான் ஆகியோர் “பலவானுக்கு” என்ற தலைப்பின்கீழ் வேத வசனங்களைப் பகிர்ந்துகொண்டனர். சத்தர்பூர் மற்றும் மஜியாவ் பணித்தளங்களில் நடைபெற்ற உபவாசக் கூடுகைகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். அன்பரா பணித்தள ஊழியர்களுக்காகவும் மற்றும் வேலை இழப்பினால் பாதிக்கப்பட்டுள்ள விசுவாசிகளின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.

செப்டம்பர் 18 கார்கட்டா கிராமத்தில் வீட்டுக் கூட்டத்தினையும், ஜப்லா மற்றும் சத்தார்பூர் பகுதிகளில் இரவு ஜெபக் கூட்டங்களையும் நடத்த கர்த்தர் உதவி செய்தார்.  ஆகஸ்ட் 20 அன்று முகம்மத்கஞ்ச் மிஷன் பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 64 பேர் பங்கேற்றனர். இப்பணித்தள ஊழியர்களுக்காகவும், விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கவும் விசுவாசிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவும் ஜெபிப்போம்.

செப்டம்பர் 19 ஆகஸ்ட் 16 மற்றும் 17 தேதிகளில் பகர்தோலி பணித்தளத்தில் “தடைகளை உடைத்திடுவோம்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டங்களில் 210 பேர் பங்கேற்றனர்.தசாரா, மஜியாவ், முகம்மத்கஞ்ச் மிஷன் ஆகிய பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட தசரா,  மஜியா, முகமத்கஞ்ச் ஆகிய பணித்தளங்களில் 16 பேரும், தேவ்காவ் பகுதியில் 19 பேரும், சிதி பகுதியில் 11 பேரும் உடன்படிக்கையின் மூலமாக தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர். டோர்பா, லோஹிங்கா, பூர்குண்டா, கடுரு, ஹிந்த்காரா ஆகிய பணித்தளங்களில் ஆலயம் கட்டப்பட எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்காக ஜெபிப்போம்.

செப்டம்பர் 20 வைதான், சிதி, தேவ்காவ், மணிக்வார் ஆகிய பணித்தளங்களில் குடும்பக் கூடுகைகளை நடத்தவும், தேவ்காவ் பணித்தளத்தில் மூன்று நாட்கள் உபவாசக் கூடுகையில் 100 பேரும், சிதி பணித்தளத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 125 பேரும் பங்கேற்றனர். பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த சகோதரர் சந்தோஷ், வுடீ நோயால் பாதிக்கப்பட்ட சகோதரர் சிந்தாமணி சாகேத் மற்றும் தீய ஆவிகளால் கட்டுப்பட்டிருந்த சகோதரி புட்டி சாகேத் மற்றும் ராஜேந்திர கேர்வார் ஆகியோர் ஜெபத்தின் மூலம் சுகம் பெற்றனர்; தேவனுக்கே மகிமை! சரீர சுகம் பெற்றவர்கள் சத்தியத்தில் நிலைத்திருக்கவும், அவர்களது குடும்பத்தினர் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும், இவர்கள் தொடர்ந்து ஆலய ஆராதனையில் பங்கேற்கவும் ஜெபிப்போம்.