July 2026

 



ஜூலை 16  பிப்ராடி, கர்தோலி மற்றும் ஜப்லா பணித்தளங்களில் நடைபெற்ற இரவு ஜெபக்கூடுகைகளில் 206 பேர் பங்கேற்று பணித்தள ஊழியங்களுக்காகவும், தேசம் தேவனை அறியவும் பாரத்துடன் ஜெபித்தனர். புதிதாக ஆத்துமாக்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவும், புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டோர் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும் ஜெபிப்போம். 

ஜூலை 17 ஜுன் 8 அன்று ஜப்லா பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர் கூடுகையில் 90 வாலிபர் பங்கேற்றனர்; ஜெப வேளையில் வாலிபர் பலர் தேவனுக்கென்று தங்களை அர்ப்பணித்தனர். இக்கூடுகையில் பங்கேற்ற வாலிபர் கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக வாழவும், பணித்தளங்களில் நடைபெறும் வாலிபர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.

ஜூலை 18 ஜப்லா, பகர்டோலி, சுந்தர்பூர், கொலோபிரா, பின்ஜரிடிபா, சங்கராய், ஹைதர்நகர், முகமத்கஞ்ச் மற்றும் சிப்லூன் பணித்தளங்களில் நடைபெற்ற விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களின் மூலமாக 565 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். போக்ராயி பணித்தளத்தில் நடைபெற்ற சிறுவருக்கான சிறப்பு நிகழ்ச்சியில் 24 சிறுவர்கள் பங்கேற்றனர். பணித்தளச் சிறுவர்கள் கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும், அவர்களது எதிர்காலத்திற்காகவும் ஜெபிப்போம். 

ஜூலை 19 ஜுன் 3 அன்று தேவ்காவ் பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 200 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து, ஜுன் 12 அன்று கோடோலி பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 25 பேர் பங்கேற்றனர்; இக்கூடுகையில் அருட்திரு திலீப் யாதவ் மற்றும் அருட்திரு சஞ்சய் ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, ஜனங்களை ஜெபத்தில் வழிநடத்தினர். புதிதாக நற்செய்தி அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்கள் சந்திக்கப்பட ஜெபிப்போம். 

ஜூலை 20 கிவாஹி, சித்தி பணித்தளங்களில் நடைபெற்ற ஞாயிறு சிறப்புக் கூட்டங்களில் 350 பேர் பங்கேற்றனர். இக்கூடுகைகள் விசுவாசிகளின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு உற்சாகத்தை அளித்தன. புநுநேஒவ பயிற்சி மையத்தில் பயிற்சிபெறும் சகோதர சகோதரிகளுக்காகவும், பயிற்சியளிப்போருக்காகவும், இப்பயிற்சி வகுப்புகள் தடையின்றி நடைபெறவும் ஜெபிப்போம்.  

ஜூலை 21 தோர்பா, பகாஸ்பூர் மற்றும் லோஹிங்கா பணித்தளங்களில் நடைபெற்ற சிறப்புக் கூட்டங்களையும் மற்றும் சார்ஹி பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் கூடுகையினையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். மேலும், பணித்தளங்களில் நடைபெற்ற விடுமுறை வேதாகம பள்ளி ஊழியங்கள் மூலம் சிறுவர் சிறுமியரை கிறிஸ்துவின் அன்பில் வழிநடத்த கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளக் கட்டுமானப் பணிகளுக்காகவும் மற்றும் பணித்தள ஊழியர்கள், விசுவாசிகளின் சரீர சுகத்திற்காகவும் ஜெபிப்போம். 


May 2026

 



மே 16 ஜார்க்கண்ட் மாநிலத்தின் முகமத்கஞ்ச் மற்றும் பகர்டோலி ஆகிய இடங்களில் நடைபெற்ற பெண்கள்  கூட்டங்களில் 170 பேர் பங்கேற்றனர். ஜெம்ஸ் பெண்கள் ஊழியக் குழுவினரின் பாடல்கள், ஆராதனை நேரம், செய்திவேளைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள், பெண்களை ஆவிக்குரிய வாழ்க்கையில்  ஊக்கப்படுத்தியதுடன், ஆத்தும ஆதாயப் பணியிலும் அவர்கள் முன்னேற வழிகாட்டியது. பெண்கள் மூலமாக குடும்பங்களிலும் மற்றும் சமுதாயத்திலும் கர்த்தர் மாற்றத்தைக் கட்டளையிட ஜெபிப்போம். 

மே 17 ஜப்லா பணித்தள ஆலயத்தில் நடைபெற்ற இரவு ஜெபத்தில் 150 விசுவாசிகள் பங்கேற்று, பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் ஜெபித்தனர். தஸ்ரார் பணித்தளத்தில் கட்டப்பட்ட ஊழியர் இல்லத்தினை ஜெபத்துடன் அர்ப்பணிக்க கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஆத்தும ஆதாயப் பணிகளுக்காகவும் மற்றும் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் சிறுவர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

மே 18 ஏப்ரல் 3 முதல் 5 வரையிலான நாட்கள், ராஜ்ஹரா பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 150 பேர் பங்கேற்றனர். மேலும்,  ஏப்ரல் 14 மற்றும் 15 ஆகிய தினங்கள் மகுவாத்தாண்ட் பணித்தளத்தில் நடைபெற்ற கூட்டங்களைக் கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூட்டங்களில், சகோ. சரவணன், சகோ. முகேஷ், சகோ. ஜோபி, சகோ. மார்ட்டின் மற்றும் சகோ. பிரவீன் ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர். பணித்தளங்களில் நடைபெறும் வாலிபர் ஊழியங்களுக்காகவும், உயர்கல்விக்காகக் காத்திருக்கும் மாணவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

மே 19 ஸ்ரீலங்கா, பொரடோலி, N.ர்.P.ஊ மற்றும் பத்கடோலி ஆகிய கிராமங்களில் சுவிசேஷக் கூட்டங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, டோர்பா பணித்தளத்தில் நடைபெற்ற இளைஞர் முகாமிலும் அருகிலிருக்கும் கிராமங்களைச் சேர்ந்த வாலிபர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். நற்செய்திக் கூட்டங்களில் பங்குபெறுவோரின் வாழ்க்கையில் கர்த்தர் கிரியை செய்யவும், பாவக்கட்டுகளிலிருந்து அவர்கள் விடுதலை பெறவும் ஜெபிப்போம். 

மே 20 ஏப்ரல் 10, 11, 12 ஆகிய தினங்கள் உமரியா பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில், 275 பேர் கலந்துகொண்டு, தேவ வார்த்தையைக் கேட்டதுடன், பல்வேறு ஜெபக்குறிப்புகளுக்காகப் பாரத்துடன் ஜெபித்தனர். கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 55 பேர் உடன்படிக்கையின் மூலம் தங்கள் விசுவாசத்தை அறிக்கைசெய்தனர்; தேவனுக்கே மகிமை! 

April 2026

 


ஏப்ரல் 16 'சோன்பத்ரா கோட்டத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஊழியர் உபவாசக் குடும்பக் கூடுகையை கர்த்தர் ஆசீர்வதித்தார். தொடர்ந்து, பணித்தளங்களில் நடைபெற்றுவரும் மற்றும் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் ஊழியங்களுக்காகவும், தேசத்திற்காகவும் தேவ சமுகத்தில் பாரத்துடன் ஜெபிக்கவும் கர்த்தர் கிருபைசெய்தார். மேலும், சித்தி பணித்தளத்தில் நடைபெற்ற மூன்று நாள் உபவாசக் கூடுகையில் 350-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இக்கூடுகைகளில், சகோ. பிரவீன்தாஸ் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். பல்வேறு பணித்தளங்களில் இன்னமும் காணப்பட்டுவரும் ஊழிய எதிர்ப்புகள் மாற ஜெபிப்போம். 

ஏப்ரல் 17 'உமரியா பணித்தள ஆலயத்தின் 7-வது ஆண்டினை முன்னிட்டு நடைபெற்ற கூட்டங்களில், சகோ. பிரவீன்தாஸ் மற்றும் சகோ. சைலஸ் சுரேஷ் ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர். இக்கூட்டங்களில், 250 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து, உமரியா, ராஜ்கர் மற்றும் சோன்பத்ரா பணித்தளங்களில் நடைபெற்ற உபவாசக் கூடுகைகளிலும் 150 விசுவாசிகள் கலந்துகொண்டனர். பணித்தளங்களில் ஊழியத்திற்கு உண்டாகும் எதிர்ப்புகள் நீங்க ஜெபிப்போம். 

ஏப்ரல் 18 'உமரியா, பய்தான், சுப்சுவா, சட்கா, பஸ்தி, ரீவா மற்றும் துதி ஆகிய பணித்தளங்களில் மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பெண்களுக்கான சிறப்புக் கூட்டங்களில் 404 பெண்கள் பங்கேற்றனர். மேலும், தேவ்காவ் மற்றும் சித்தி பணித்தளங்கள்களில் நடைபெற்ற பெண்கள் கூடுகைகளிலும் 210 பெண்கள் பங்கேற்றனர். இக்கூட்டங்களில், சகோதரி ஆல்மா கிரேஸ் தேவ வார்த்தையைப் பகிர்ந்துகொண்டதோடு, பெண்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஏற்ற ஆலோசனைகளையும் வழங்கி அவர்களுக்காக ஜெபித்தார். பணித்தளங்களில் செய்யப்பட்டுவரும் பெண்கள் ஊழியங்களுக்காக ஜெபிப்போம்.

ஏப்ரல் 19 'மஹராஸ்டிரா கோட்டத்தில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டங்களை கர்த்தர் ஆசீர்வதித்தார்; இக்கூட்டங்களில், போதகர் சஞ்சய் பிரான்சிஸ் கர்த்தருடைய வார்த்தையைப் பிரசங்கித்தார். பலர் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கென்று அர்ப்பணித்தனர்; 50 இளைஞர்கள், 20 தம்பதிகள் உட்பட 80 பேர் புதிதாக ஆலய ஆராதனையில் கலந்துகொள்ளுகின்றனர்; தேவனுக்கே மகிமை! 

ஏப்ரல் 20 'சிப்லுனில் நடைபெற்ற கருத்தரங்கினையும், சாதாராவில் நடைபெற்ற குடும்பக் கூடுகையையும், இச்சல்கரஞ்ஜியில் நடைபெற்ற மூன்று நாள் ஜெபக் கூடுகையையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். கோடோலியில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 40 பேர் பங்கேற்றனர். கோடோலி பணித்தளத்தில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் உபவாசக் கூட்டத்திற்காகவும் மற்றும் வாலிபர் கூட்டங்களுக்காகவும் ஜெபிப்போம்.

March 2026

 


மார்ச் 16 : மசூர் மற்றும் சத்தாரா பணித்தளங்களில் நடைபெற்ற பெண்கள் கூட்டங்களை கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூட்டங்களில், சகோதரி தீபாலி லோகண்டே கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து, பணித்தளங்களில் நடைபெற்ற விசேஷித்த ஜெபக் கூடுகைகளில், பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காகவும், இரட்சிக்கப்படாத மக்களுக்காகவும், தேசத்திற்காகவும் ஒருமனதுடன் ஜெபிக்க கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளங்களில் வீட்டு சபைகளை நடத்தும்படியாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர்களுக்காகவும் மற்றும் நடைபெற்றுவரும் வீட்டு சபைகளுக்காகவும் ஜெபிப்போம்.  

மார்ச் 17 : சிப்லன் பணித்தளத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான கருத்தரங்கில், சகோதரர் மேக்நாத் பவார் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். சகோ. சுந்தர்ராஜ், சகோதரி கிரேஷ் லீனா மற்றும் சகோ. நிதின் ஆகியோர் மாணவர்களை உற்சாகமூட்டும் விளையாட்டுகளை நடத்தி, அவர்களுக்காக ஜெபித்தனர். தெற்கு மண்டலத்தில் மாணவர்கள் மத்தியில் செய்யப்பட்டுவரும் ஊழியங்களுக்காகவும், மாணவர்களின் மேற்படிப்பு மற்றும் எதிர்காலத்திற்காகவும் ஜெபிப்போம். 

மார்ச் 18 : மல்கர் பணித்தளத்தில் முதியோர் இல்லத்திற்குச் சென்று முதியவர்களைச் சந்தித்து பரிசுகளை வழங்கவும், கிறிஸ்துவின் அன்பினை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் கர்த்தர் கிருபைசெய்தார். பணித்தளத்தைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் சுவிசேஷத்திற்கான வாசல்கள் திறக்கப்பட ஜெபிப்போம். 

மார்ச் 19 : மகராஸ்ட்டிராவின் பல்வேறு பணித்தளங்களில் வேதாகமப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்க கர்த்தர் வழிகளைத் திறந்தார். குடோலி பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூட்டத்தில் 35 பேர் பங்கேற்று தேசத்திற்காக பாரத்துடன் ஜெபித்தனர்; போதகர் பிரகாஷ் திவாடே கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். வேதாகமப் பயிற்சி வகுப்புகள் வாயிலாக அநேக ஆத்தும ஆதாயகர்கள் உருவாக ஜெபிப்போம். 

மார்ச் 20 : ஷிராலா பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் ஞாயிறு ஆராதனை ஆசீர்வாதமாகவும், அநேகருக்கு பிரயோஜனமாகவும் அமைந்தது. பிலாவாடி, மல்வாடி பணித்தளங்களில் பெண்களுக்கான சிறப்புக் கூட்டங்களுடன், அவர்களது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக, தையல் பயிற்சி மையங்களும் தொடங்கப்பட்டன. தொடர்ந்து, ஊழியர்களின் துணைவியருக்காக நடைபெற்ற கூடுகையில், சகோதரி ஸ்வாதி பவார் மற்றும் போதகர் சஞ்சய் பன்ஹல்கர் ஆகியோர் தேவ வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர். பணித்தளங்களில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் சுவிசேஷப் பணிகளுக்காகவும் மற்றும் ஊழியர்களின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம். 

மார்ச் 21 : மார்ச் 5 முதல் 7 வரை பக்கார்டோலி பணித்தளத்தில் நடைபெறவிருக்கும் உபவாக் கூடுகைக்காகவும், அன்பரா பணித்தள ஆலயம் மீண்டும் தொடங்கப்படவும் மற்றும் பினா காலனி, ரேணு சாகர் காலணி, லாங்கோ காலனி, அன்பரா காலனி போன்ற பகுதிகளிலிருந்து புதிய ஆத்துமாக்கள் சபையில் சேரவும், வரும் நாட்களில் பணித்தளங்களில் நடைபெறவிருக்கும் பெண்கள் கூடுகைகளுக்காகவும் ஜெபிப்போம். 


Feb 2026

 


பிப்ரவரி 15 ஜார்க்கண்ட் மாநிலத்தின் சத்தர்பூர், ஜப்லா, கர்வா பள்ளி, நௌதீஹா, கெருவா, இமாலியாதட், {ட்டுக்டாக், சர்திவா, சங்க்ராஹி, மொஹம்மத்கஞ்ச், பிட்கயி மற்றும் பெத்லா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சுவிசேஷக் கூட்டங்களின் வாயிலாக 1325 பேருக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது. சிகோயி, பிர்பாடி, பொஜெங்கோ ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற கூடுகைகளில் 265 பேர் பங்கேற்று தேவ வசனத்தைக் கேட்டனர். இப்பணித்தளங்களில் தொடர்ந்து நடைபெற்றுவரும் பின்தொடர் ஊழியங்களுக்காக ஜெபிப்போம்.

பிப்ரவரி 16 மொஹமத்கஞ்ச் பணித்தளத்தில் 3 நாட்கள் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் பணித்தள விசுவாசிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் ஜெபித்தனர்; இக்கூடுகையில், சகோ. ஜோ பால்சன், சகோ. சரவணன் மற்றும் சகோ. எட்வர்ட் ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர். போச்ரா, குத்துவா, கோயிரிடோல், பஜார் சமிதி, நஸ்ரியா, கட்ரு போன்ற பணித்தளங்களில் சுமார் 1000 பேருக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டு, சுவிசேஷக் கைப்பிரதிகள் மற்றும் புதிய ஏற்பாடுகள் வழங்கப்பட்டன. இவர்களது இரட்சிப்பிற்காக ஜெபிப்போம்.

பிப்ரவரி 17 சிஹவால், சுர்ஹாட், ஐதி, சித்தி, மான்பூர், உமரியா, சத்னா, மணிக்வார், கர்ரா, லோரி மற்றும் லால்கான் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளின் மூலமாக 3820 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும், குளிர்கால ஆடைகளை வழங்கவும் கர்த்தர் உதவிசெய்தார். இச்சிறுவர்களின் வாழ்க்கையில் கிறிஸ்துவின் வார்த்தைகள் கிரியை செய்யவும், இவர்களது குடும்பத்தினர் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 18 கோபர்டே பணித்தளத்தில் நடைபெற்ற இலவச மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாமின் மூலமாக கிறிஸ்துவின் அன்பினையும் கூடவே அறிவிக்க கர்த்தர் கிருபை செய்தார். பாண்டேதிஹ் மற்றும் பர்வாடி ஆகிய இரண்டு புதிய  கிராமங்களில் 4 பேர் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர்; தேவனுக்கே மகிமை! புதிதாக ஆராதனையில் பங்குபெறும் விஷால் குமார், சிவா, தர்மேந்திரா, சோனா, சியாமணி மற்றும் பெலா ஆகியோர் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்க ஜெபிப்போம்.

பிப்ரவரி 19 உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் சுபா-சுவா, சோபன், டாலா, அன்பரா, சக்திநகர், பைதான் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டங்களில் 1450 பேர் பங்கேற்றனர். மஹராஷ்டிரா மாநிலத்தில் பல பகுதிகளில் சுவிசேஷத்தைக் கேட்ட காவல்துறை பணியாளர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் பிற மக்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தினால் தொடப்படவும், தங்கள் பணிகளில் கிறிஸ்துவை வெளிப்படுத்தவும் ஜெபிப்போம். 

Jan 2026

 


ஜனவரி -  17  சித்தி பணித்தளத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற உபவாசக் கூட்டத்தில் 250 பேர் பங்கேற்றனர்; சகோ. சைலஸ் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். பணித்தள ஊழியங்களுக்காகவும், தேசம் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும் விசுவாசிகள் ஒருமனதுடன் இணைந்து ஜெபித்தனர். கர்த்தருடைய பந்தியுடன் ஆசீர்வாதமாக இக்கூட்டம் நிறைவடைந்தது. விசுவாசிகள் மத்தியில் ஜெப வாஞ்சை பெருகவும், புதிதாக ஆலய ஆராதனையில் கலந்துகொள்ளும் ஆத்துமாக்களுக்காகவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  18  உமரியா பணித்தளத்தில் நடைபெற்ற மூன்று நாள் உபவாசக் கூடுகையில் சகோ. கயா பிரசாத் தர்வையா கலந்துகொண்டு, விசுவாசிகளை ஜெபத்தில் வழிநடத்தினார். இக்கூட்டங்களில், 159 விசுவாசிகள் பங்கேற்றனர். மேலும், மஜியாவன் பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையிலும் 180 விசுவாசிகள் பங்கேற்று தேசத்திற்காக பாரத்துடன் ஜெபித்தனர். பணித்தள விசுவாசிகள் விசுவாசத்தில் பெலப்படவும், பணித்தளங்களில் வாலிபர்கள் சந்திக்கப்படவும், வாலிபர் மத்தியில் செய்யப்படும் ஊழியங்கள் பலன் தரவும் ஜெபிப்போம்.  

ஜனவரி - 19 சித்தி, உமரியா, தேவ்கான் மற்றும் சத்னா ஆகிய பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 27 பேர், கிறிஸ்துவின் மேலுள்ள தங்கள் விசுவாசத்தை உடன்படிக்கையின் வாயிலாக வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! இவர்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும், இவர்கள் மூலமாக இவர்களது குடும்பம் மற்றும் உறவினர்கள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  20 பீஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில், ஜெம்ஸ் மருத்துவ ஊழியங்கள் மூலமாக, பணித்தள மக்கள் சுமார் 2000 பேருக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சையினை வழங்கவும், அவர்களுக்கு சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ளவும் கர்த்தர் உதவிசெய்தார். ஜெம்ஸ் மருத்துவ ஊழியங்கள் மூலமாக வரும் நாட்களில் பணித்தளங்களில் செய்யப்படவிருக்கும் இலவச மருத்துவ முகாம்களின் மூலமாக, ஜனங்கள் சரீர மற்றும் ஆத்தும விடுதலை பெற ஜெபிப்போம். 

ஜனவரி - 21  முகமத்கஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற GIANT கூட்டத்தில், 120 விசுவாசிகள் பங்கேற்றனர்; சகோ. ஹென்றி கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார்.  அவ்வாறே, ஜப்லா பணித்தளத்தில் நடைபெற்ற இரவு ஜெபத்தில் 30 பேரும், சுந்தர்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற ஜெபக்கூடுகையில் 250 பேரும் கலந்துகொண்டு பல்வேறு ஜெபக்குறிப்புகளுக்காக பாரத்துடன் ஜெபித்தனர். பணித்தளங்களில் நற்செய்திக் கூட்டங்கள் எவ்விதத் தடையுமின்றி நடைபெறவும், நற்செய்தியினால் ஜனங்கள் விடுதலையடையவும் ஜெபிப்போம். 

    

December 2025

                                                  தெற்கு மண்டலம்

டிசம்பர் 17 பிலவாடி பணித்தளத்தில் ‘கிறிஸ்தவத் தலைவர்களின் ஐந்து தகுதிகள்’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இணையவழியிலான கூடுகை பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாக அமைந்தது. சிப்ளுன் பணித்தளத்தில் முதியோருக்கான எழுத்தறிவு வகுப்புடன், வேதத்தினை வாசிக்கவும் கற்றுக்கொடுக்கப்பட்டது. இதன் மூலம் வரும் நாட்களில், முதியோர் வேத வசனத்தை வாசிக்கவும், தியானிக்கவும் வழி உண்டாக ஜெபிப்போம்.  

டிசம்பர் 18 நவம்பர் 1 முதல் 7 வரையிலான நாட்கள், லவாலா பணித்தளத்தில் நடைபெற்ற புநுநேஒவ டுநஎநட  2 பயிற்சியில் 20 சகோதரர்கள் மற்றும் 23 சகோதரிகள் பங்கேற்று, தலைவர்கள் வாயிலாக சிறந்த வேதாகமப் பயிற்சியினைப் பெற்றனர். ரத்னகிரி பணித்தளத்தில் நடைபெற்ற ஆண்டு விழாவில், 120 பேர் கலந்துகொண்டு சுவிசேஷத்தைக் கேட்டனர். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் பயிற்சி ஊழியங்களுக்காகவும் மற்றும் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் நற்செய்திக்கூட்டங்களுக்காகவும் ஜெபிப்போம். 

டிசம்பர் 19 ஜப்லா பணித்தளத்தில் புதிய விசுவாசிகளுக்காக நடத்தப்பட்ட ஒருநாள் கூடுகையினையும் மற்றும் பெத்லா பணித்தளத்தில் நடைபெற்ற சுவிசேஷக் கூட்டத்தினையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். பிப்பர்டி பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தினைத் தொடர்ந்து நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 200 விசுவாசிகள் கலந்துகொண்டு பாரத்துடன் ஜெபித்தனர். வரும் நாட்களில் பணித்தளங்களில் 300 ஜெபக்குழுக்களை தொடங்கும் திட்டத்திற்காக ஜெபிப்போம்.   

டிசம்பர் 20 சுண்டர்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கானக் குடும்பக் கூடுகையில் சகோ. ஜோனத்தான் எட்வர்ட் மற்றும் சகோதரி பிரின்ஸி ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையுடன், குடும்ப வாழ்க்கைக்கேற்ற ஆலோசனைகளையும் பகிர்ந்துகொண்டனர். சுண்டர்பூர் மற்றும் ஜப்லா பணித்தளங்களில் நடைபெற்ற இரவு ஜெபங்களில் 250 பேர் கலந்துகொண்டு தேசத்திற்காகவும் மற்றும் பணித்தள ஊழியங்களுக்காகவும் ஜெபித்தனர். ‘எழும்பிப் பிரகாசி’ என்ற கருப்பொருளின் கீழ் சுண்டர்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர் கூட்டத்தில் 65 பேரும், தொடர்ந்து நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 152 பேரும் பங்கேற்றனர். பணித்தளங்களில் உண்டாகும் எதிர்ப்புகள் மாறவும், நடைபெறவிருக்கும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

டிசம்பர் 21  துதி பணித்தளத்தில் நடைபெற்ற 21 நாட்கள் உபவாசக் கூடுகையில் விசுவாசிகள் ஆர்வமுடன் பங்கேற்று தேசத்திற்காகவும் மற்றும் பணித்தளத்திற்காகவும் ஜெபித்தனர். பல்வேறு தடைகளின் மத்தியிலும், விசுவாசிகளைச் சந்தித்து அவர்களுக்காக ஜெபிக்க தேவன் கிருபைசெய்தார். பெலவீனமாயிருக்கும் விசுவாசிகள் விரைவில் சுகம் பெறவும், விசுவாசிகள் விசுவாசத்தில் உறுதியாக நிற்கவும் ஜெபிப்போம்.