July 2025

                                                      தெற்கு மண்டலம்




ஜுலை 17 பக்கர் டோலி, சொர்குடா மற்றும் குட்டுவாபனிடால் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட விடுமுறை வேதாகமப்பள்ளி ஊழியங்களின் மூலமாக, 316 சிறுவர்  சிறுமியருக்கு, கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும், தொடர்ந்து, ஹைதர் நகர்,மியாவோ,முகமத்கஞ்ச்,ஜப்லா மற்றும் சகிதாபாத் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களின் மூலமாக 604 சிறுவர் சிறுமியரைச் சந்தித்து கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். இச்சிறு பிள்ளைகளின் மூலமாக அவர்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கிறிஸ்துவை அறிந்துகொள்ள ஜெபிப்போம். 

ஜுலை 18 பணித்தளங்களில், புதிதாக இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்களுக்காக நடைபெற்ற சிறப்புக் கூடுகையில் 30 விசுவாசிகள் பங்கேற்றனர். இவர்களுக்கு கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படைச் சத்தியங்களைப் போதித்து, அவர்களது குடும்பங்களுக்காக ஜெபிக்க கர்த்தர் உதவிசெய்தார். சமுதாயத்தில் இவர்கள் கிறிஸ்துவுக்காக எழுந்து பிரகாசிக்கவும், தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும், குடும்பத்தாருக்கு சாட்சியாக விளங்கவும் ஜெபிப்போம்.  

ஜுலை 19 ஜப்லா பணித்தளத்தில், ஜுன் 1 அன்று நடைபெற்ற முழு இரவு ஜெபத்தில் 200 பேர் கலந்துகொண்டு, பணித்தள மக்களுக்காகவும், பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். தொடர்ந்து, ஜுன் 4 மற்றும் 5 ஆகிய தினங்கள், ஜப்லா மற்றும் சத்தர்பூர் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்களில் 120 பேரும், மற்றும் ஜுன் 11 மற்றும் 13 ஆகிய தினங்கள் கட்டோலி பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 50 பேரும் கலந்துகொண்டனர். பணித்தள விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் மற்றும் ஆத்துமபாரத்திலும் வளரவும், தங்கள் குடும்பத்தினரை கிறிஸ்துவுக்கென்று ஆதாயப்படுத்தவும் ஜெபிப்போம்.   

ஜுலை 20 பிஞ்சரடிப்பா பணித்தளத்திற்குட்பட்ட மட்கடியா கிராமத்தில் நடைபெற்ற சகோதரர் சுதின் கடியாவின் குழந்தை அர்ப்பணிப்பு ஆராதனை, குடும்பத்தாருக்கும் மற்றும் அக்கிராமத்து மக்களுக்கும் ஆசீர்வாதமாக அமைந்தது. இவ்வாராதனையின்போது, குழந்தையை அர்ப்பணிக்கவும் மற்றும் கலந்துகொண்ட மட்கடியா கிராமத்தினர் 30 பேருக்கு கிறிஸ்துவின் நற்செய்தியினை அறிவிக்கவும் கர்த்தர் கிருபைசெய்தார். இக்கிராமத்தினரின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம்.  

ஜுலை 21 ஜப்பன் பணித்தளத்தில், 70 பேரைச் சந்தித்து கிறிஸ்துவின் நற்செய்தியினை அறிவிக்கவும் மற்றும் அவர்களுக்கு ஒருவேளை ஆகாரம் அளிக்கவும் மற்றும் ஜுன் 15 அன்று துசேரா பணித்தளத்தில் நடத்தப்பட்ட கூட்டங்களின் மூலமாக 100 பேருக்கு சுவிசேஷத்தை அறிவிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். இப்பணித்தளங்களில் சுவிசேஷத்திற்கு வரும்நாட்களில் திறந்த வாசல் உண்டாகவும், இப்பணித்தளத்தில் முன்னெடுக்கப்படும் நற்செய்திப்பணிகள் பலன்களைத் தரவும் ஜெபிப்போம். 


June 2025

                                                     தெற்கு மண்டலம்



🔊தேவ்கான் பணித்தள ஆலயத்தில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்புக் கூடுகையில் 35 விசுவாசிகள் கலந்துகொண்டனர். திருச்சபையிலும் மற்றும் குடும்பத்திலும் பெண்கள் நிறைவேற்றவேண்டிய பங்கினைக் குறித்தும் மற்றும் சமுதாயத்தில் அவர்கள் மூலமாக  உருவாகும் தாக்கத்தினைக் குறித்தும் வேத வசனங்களின் அடிப்படையில் போதிக்கப்பட்டதுடன், வாழ்க்கைக்கேற்ற நடைமுறை ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து, தேவ்கான் மற்றும் சித்தி பணித்தளங்களில் நடைபெற்ற சபை மூப்பர்களுக்கான சீஷத்துவ மற்றும் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கானப் பயிற்சியிலும் 80 பேர் பங்கேற்றனர். 

🔊 இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற 32 பேர், உடன்படிக்கையின் மூலம் கிறிஸ்துவின் மீது உள்ள தங்களது அன்பையும் மற்றும் விசுவாசத்தையும் சபைக்கு வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை!

🔊 ஹைதர்நகர்  பணித்தளத்தில் நடைபெற்ற பெண்களுக்கானக் கூடுகையில் 14 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து, இப்பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையிலும் 28 பேர் கலந்துகொண்டு பணித்தள மக்களின் இரட்சிப்பிற்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர்.

🔊 ஜப்லா மற்றும் சதர்பூர் பணித்தளங்களில் நடைபெற்ற இரவுக் கூடுகையில் 200 பேர் கலந்துகொண்டு தேசத்திற்காகவும் மற்றும் பணித்தள ஊழியங்களுக்காகவும் ஊக்கமாக ஜெபித்தனர். மேலும், குருவா பணித்தளத்தில் நடைபெற்ற ஜெபக்கூடுயிலும் 25 பேர் பங்கேற்றனர். 

🔊 முகமத்கஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 60 பேர் பங்கேற்றனர். ஜெப வேளையின் போது பலர் சுவிசேஷத்தை அறிவிக்கவும் மற்றும் கிறிஸ்துவின் பணிக்காகவும் தங்களை அர்ப்பணித்தனர். 

🔊 பணித்தளங்களில் நடைபெற்ற விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களின் மூலமாக, அநேக சிறுவர் சிறுமியருக்கு பாடல்கள் வசனங்கள் மற்றும் வேதாகம சம்பவங்கள் மூலமாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார்.

🔊 கிருஷ்ணநகர், பங்கட்டி, மொட்பா, உமரியா போன்ற கிராமங்களில் தீராத வியாதிகளினாலும், சாபத்தினாலும் மற்றும் அசுத்த ஆவியின் பிடியினாலும் பாதிக்கப்பட்ட பலர், ஜெபத்தின் பலனால் குணமடைந்தனர். தேவனுக்கே மகிமை!

🔊 மனிக்வார் பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காகவும், சக்கரியா பணித்தளத்தில் ஆலய ஆராதனை மற்றும் விசுவாசிகளுக்கு உண்டாகும் எதிர்ப்புகள் மாறவும் மற்றும் பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.

MAY 2025

                                       தெற்கு மண்டலம்


மார்ச் 31 முதல் ஏப்ரல் 2 வரையிலான நாட்கள் ஆகாய் ஊழியர்கள் மூலமாக வாரனாசியில் நடைபெற்ற தலைவர்களுக்கான பயிற்சியினை கர்த்தர் ஆசீர்வதித்தார். தலைமைத்துவத்திற்கான பண்புகளைப் பெருக்கிக்கொள்ளவும், வசனத்தின் அடிப்படையில் முன்மாதிரியாகத் தங்களைக் காண்பிக்கவும் பங்கேற்றவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. 

பிஞ்சரடிப்பா பணித்தளத்தில் ஏப்ரல் 14 மற்றும் 15 ஆகிய தினங்கள் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 50 விசுவாசிகள் பங்கேற்றனர். 

போச்ரா பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர்களுக்கான சிறப்புக் கூடுகையில் 65 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். சகோ. சாம் ரிச்சர்டு, சகோதரி பூணம் ஹல்டா மற்றும் சகோதரி ஹெப்சி ஆகியோர் இக்கூடுகையில் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, வாலிபர்களின் வாழ்க்கைக்கேற்ற ஆலோசனைகளை வழங்கினர். 

வனாஞ்சல் கோட்டத்தின் லோஹிங்கா பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் கூடுகையில் 50 பேர் கலந்துகொண்டு ஆசீர்வதிக்கப்பட்டனர். 

ராஜ்ஹரா பணித்தளத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற உபவாசக் கூடுகையிலும்,  தொடர்ந்து, ஜப்லா பணித்தளத்தில் நடைபெற்ற இரவு ஜெபக் கூடுகையிலும் மற்றும் முகமதுகஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் உபவாசக் கூடுகையிலும் பணித்தள மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று, பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர்.

கடந்த மாதத்தில், 12 பேர் இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, உடன்படிக்கையின் மூலம் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை!

அன்பரா பணித்தளத்தில் பல்வேறு எதிர்ப்புகளின் நிமித்தம் ஆலய ஆராதனை தடைபட்டதைத் தொடர்ந்து, வீடுகளில் தொடங்கப்படவிருக்கும் ஜெபக்கூடுகைகளுக்காகவும் மற்றும் இப்பணித்தளத்தின் சமுதாயப் பராமரிப்பு மையத்தின் சுற்றுச் சுவர் கட்டுமானப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம். 

எதிர்ப்புகளின் மத்தியிலும், லௌரி, ரீவா, உமரியா, கோன் மற்றும் சோப்பன் ஆகிய பணித்தளங்களில், 30 ஆத்துமாக்கள் தங்கள் விசுவாசத்தை அறிக்கையிட்டு கிறிஸ்துவின் மந்தையில் சேர்ந்தனர்; தேவனுக்கே மகிமை! 

பணித்தளங்களில் விசுவாசிகளுக்கு உண்டாகும் நெருக்கங்கள் மற்றும் சவால்கள் மாறவும், எதிர்ப்போர் கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம். 


April 2025

 தெற்கு மண்டலம்

 


•சத்தர்பூர், ஜப்லா, துசேரா, முகமத்கஞ்ச், நாகருந்தரி மற்றும் மஜியாவ் ஆகிய பணித்தளங்களில் சிறப்பு ஜெபக்கூடுகைகள் மற்றும் கன்வென்ஷன் கூட்டங்ககளை நடத்த கர்த்தர் கிருபைசெய்தார். இக்கூட்டங்களில், சகோ. வினைய், சகோ. கொர்நேலியுஸ், சகோ. கியான் மற்றும் சகோ. சரவணன் ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, ஜனங்களை ஜெபத்தில் வழிநடத்தினர். இக்கூட்டங்களில், 600 பேர் பங்கேற்றனர்.

• மார்ச் 1 அன்று ஜப்லா மற்றும் சத்தர்பூர் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற இரவு ஜெபக் கூட்டங்களில், 200 பேர் பங்கேற்று, ஊழியத்திற்காகவும், பணித்தளங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர்.

• துசேரா பணித்தளத்தில் மார்ச் 7 மற்றும் 8 ஆகிய தினங்கள் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டங்களில், 150 விசுவாசிகள் பங்கேற்றனர். இக்கூட்டங்களில், சகோ. லெஸ்லின், சகோ. எடி ஜோனத்தான் மற்றும் சகோ. சரவணன் ஆகியோர் 'வேரிலிருந்து கனிகொடுங்கள்" என்ற தலைப்பின் கீழ் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டனர்.

• மார்ச் 8 அன்று முகமத்கஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர்களுக்கான சிறப்புக் கூட்டத்தில் 31 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். இக்கூடுகையில், சகோ. ரிச்சர்டு மற்றும் சகோ. ஜோசுவா ஆகியோர் வேதத்தின் அடிப்படையில் வாலிபர்களுக்கேற்ற ஆலோசனைகளையும் மற்றும் செய்தியையும் அளித்து, அவர்களை ஜெபத்தில் வழிநடத்தினர்.

• ஜப்லா பணித்தளத்தில் மார்ச் 19 அன்று நடைபெற்ற பெண்கள் கூட்டத்தில் 100 பேர் பங்கேற்றனர்; இக்கூட்டத்தில், சகோ. பிரின்ஸ் தேவச் செய்தியினைப் பகிர்ந்துகொண்டார்.

• மார்ச் 20 அன்று முகமத்கஞ்ச், நாகருந்தரி மற்றும் மஜியாவ் பணித்தள விசுவாசிகள் 110 இணைந்து ஓரிடத்தில் தேவனை ஆராதிக்க கர்த்தர் உதவிசெய்தார்; இக்கூடுகையின்போது இயேசுவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 38 பேர் உடன்படிக்கையின் மூலமாக தங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை!

• வனாஞ்சல் கோட்டத்தின் தொர்பா, சர்ஹி மற்றும் கோமோ ஆகிய பணித்தளங்களில் நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகளில், 210 பேர் கலந்துகொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற ஞாயிறுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியினையும் கர்த்தர் ஆசீர்வதித்தார்.

• பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காகவும், விசுவாசிகளின் சுகத்திற்காகவும் மற்றும் ஊழியத்திற்கான தடைகள் நீங்கவும் ஜெபிப்போம்.

March 2025

 தெற்கு மண்டலம்


  • சோன்பத்ரா கோட்டப் பணித்தளங்களில் நடைபெற்ற பல்வேறு நற்செய்தி மற்றும் சுகமளிக்கும் கூட்டங்களில், அநேகர் இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டதுடன், வியாதிகளிலிருந்தும் அநேகர் விடுதலையடைந்தனர். அத்துடன், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சமாதானப் புருஷர்களுக்கானக் கூடுகையில் 30 பேர் பங்கேற்றனர்; தேவனுக்கே மகிமை!
  • மஜியான், நகர்-உண்டாரி மற்றும் முகமத்கஞ்ச் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற உபவாசக் கூட்டங்களில்145 பேர் கலந்துகொண்டு, பணித்தள ஊழியங்களுக்காகவும், தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். 
  • பெத்லா பணித்தளத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமின் வாயிலாக 155 பேர் பயனடைந்தனர். 
  • 'ஆயத்தமாகு மற்றவர்களை ஆயத்தப்படுத்து' என்ற கருப்பொருளின் கீழு; கடுவா பணித்தளத்தில் நடைபெற்ற ஊழியர் கருத்தரங்கு மிகுந்த ஆசீர்வாதமாக அமைந்தது. இக்கருத்தரங்கில் 67 ஊழியர்கள் கலந்துகொண்டனர். மேலும், ராஜ்ஹரா பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கான ஒருநாள் சிறப்புக் கூட்டத்திலும் விசுவாசிகள் உற்சாகமாகப் பங்கேற்றனர். 
  • சத்தாரா மற்றும் ரஹ்மத்பூர் பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களின் மூலமாக 150 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவி செய்தார். 
  • மஹராஷ்டிராவில் ஜனவரி 2 முதல் பிப்ரவரி 6 வரையிலான நாட்களில் நடைபெற்ற தொடர் உபவாசக் கூடுகை மிகுந்த ஆசீர்வாதமாக அமைந்தது. இக்கூடுகையில், ஷிராலா மற்றும் குடோலி பணித்தள விசுவாசிகள் உற்சாகமாகக் கலந்துகொண்டு ஜனங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். 
  • உமரியா மற்றும் மணிக்வார் பணித்தளங்களில் கட்டப்பட்டுவரும் ஆலயங்களுக்காகவும், சுகவீனமாயிருக்கும் விசுவாசிகள் விரைவில் குணமடையவும், விசுவாசிகளின் பிள்ளைகளுக்கு ஏற்ற காலத்தில் திருமணம் நடைபெறவும் ஜெபிப்போம். 


FEBRUARY 2025

தெற்கு மண்டலச் செய்திகள்


  • கடந்த நாட்களில் சுமார் 4718 பேருக்கு கிறிஸ்துவின் நற்செய்தியினை கைப்பிரதிகளின் வாயிலாகவும் மற்றும் நற்செய்தி அறிவிப்பின் மூலமாகவும் பகிர்ந்துகொள்ள கர்த்தர் உதவிசெய்தார். 
  • வனாஞ்சல் கோட்டத்தில் நடைபெற்ற சுவிசேஷக் கூட்டங்களின் மூலமாக பணித்தள மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது. 
  • ஜார்க்கண்ட் மாநிலத்தின் லோஹிங்கா மற்றும் புர்குண்டா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டங்களில், 200-க்கும் மேலானோர் பங்குபெற்று நற்செய்தியைக் கேட்டனர். 
  • டாட்டா பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கான சிறப்புக் கூடுகையில், 45 விசுவாசிகள் பங்கேற்றனர். விசுவாசத்தில் பெலப்படவும், கிறிஸ்துவுக்காகச் செயல்படவும் மற்றும் தங்கள் அர்ப்பணிப்பினைப் புதுப்பித்துக்கொள்ளவும் இக்கூடுகை வகைசெய்தது. 
  • முண்டா பழங்குடி சமுகத்தைச் சேர்ந்த 28 இளைஞர்களைச் சந்திக்கவும் மற்றும் கிறிஸ்துவின் அன்பினை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் கர்த்தர் கிருபை பராட்டினார். 
  • பணித்தளங்களில் செய்யப்பட்ட சிறுவர் ஊழியங்களின் மூலம், சிறுவர் சிறுமியர்களுக்கு பாடல்கள், வேதாகமச் சம்பவங்கள் மற்றும் மிஷனரிச் சாட்சிகளின் வாயிலாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும், மற்றும் அவர்களது பெற்றோர்களுக்காக ஜெபிக்கவும் கர்த்தர் கிருபைசெய்தார்.  
  • சத்தர்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற முழு இரவு ஜெபத்தில் 50 பேரும் மற்றும் முகமத்கஞ் பணித்தளத்தில் நடைபெற்ற சிறப்புக் கூடுகையில் 150 விசுவாசிகள் பங்கேற்று கர்த்தருடைய வசனத்தைக் கேட்டனர். 
  • உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவோடு தங்களை இணைத்துக்கொண்ட விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் உறுதியாக நிற்கவும், சுகவீனமாயிருக்கும் பணித்தள மக்களுக்காகவும் மற்றும் பணித்தளங்களில் நடைபெறவிருக்கும சிறுவர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.