தெற்கு மண்டலம்
டிசம்பர் 17 பிலவாடி பணித்தளத்தில் ‘கிறிஸ்தவத் தலைவர்களின் ஐந்து தகுதிகள்’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இணையவழியிலான கூடுகை பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாக அமைந்தது. சிப்ளுன் பணித்தளத்தில் முதியோருக்கான எழுத்தறிவு வகுப்புடன், வேதத்தினை வாசிக்கவும் கற்றுக்கொடுக்கப்பட்டது. இதன் மூலம் வரும் நாட்களில், முதியோர் வேத வசனத்தை வாசிக்கவும், தியானிக்கவும் வழி உண்டாக ஜெபிப்போம்.
டிசம்பர் 18 நவம்பர் 1 முதல் 7 வரையிலான நாட்கள், லவாலா பணித்தளத்தில் நடைபெற்ற புநுநேஒவ டுநஎநட 2 பயிற்சியில் 20 சகோதரர்கள் மற்றும் 23 சகோதரிகள் பங்கேற்று, தலைவர்கள் வாயிலாக சிறந்த வேதாகமப் பயிற்சியினைப் பெற்றனர். ரத்னகிரி பணித்தளத்தில் நடைபெற்ற ஆண்டு விழாவில், 120 பேர் கலந்துகொண்டு சுவிசேஷத்தைக் கேட்டனர். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் பயிற்சி ஊழியங்களுக்காகவும் மற்றும் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் நற்செய்திக்கூட்டங்களுக்காகவும் ஜெபிப்போம்.
டிசம்பர் 19 ஜப்லா பணித்தளத்தில் புதிய விசுவாசிகளுக்காக நடத்தப்பட்ட ஒருநாள் கூடுகையினையும் மற்றும் பெத்லா பணித்தளத்தில் நடைபெற்ற சுவிசேஷக் கூட்டத்தினையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். பிப்பர்டி பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தினைத் தொடர்ந்து நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 200 விசுவாசிகள் கலந்துகொண்டு பாரத்துடன் ஜெபித்தனர். வரும் நாட்களில் பணித்தளங்களில் 300 ஜெபக்குழுக்களை தொடங்கும் திட்டத்திற்காக ஜெபிப்போம்.
டிசம்பர் 20 சுண்டர்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கானக் குடும்பக் கூடுகையில் சகோ. ஜோனத்தான் எட்வர்ட் மற்றும் சகோதரி பிரின்ஸி ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையுடன், குடும்ப வாழ்க்கைக்கேற்ற ஆலோசனைகளையும் பகிர்ந்துகொண்டனர். சுண்டர்பூர் மற்றும் ஜப்லா பணித்தளங்களில் நடைபெற்ற இரவு ஜெபங்களில் 250 பேர் கலந்துகொண்டு தேசத்திற்காகவும் மற்றும் பணித்தள ஊழியங்களுக்காகவும் ஜெபித்தனர். ‘எழும்பிப் பிரகாசி’ என்ற கருப்பொருளின் கீழ் சுண்டர்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர் கூட்டத்தில் 65 பேரும், தொடர்ந்து நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 152 பேரும் பங்கேற்றனர். பணித்தளங்களில் உண்டாகும் எதிர்ப்புகள் மாறவும், நடைபெறவிருக்கும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.
டிசம்பர் 21 துதி பணித்தளத்தில் நடைபெற்ற 21 நாட்கள் உபவாசக் கூடுகையில் விசுவாசிகள் ஆர்வமுடன் பங்கேற்று தேசத்திற்காகவும் மற்றும் பணித்தளத்திற்காகவும் ஜெபித்தனர். பல்வேறு தடைகளின் மத்தியிலும், விசுவாசிகளைச் சந்தித்து அவர்களுக்காக ஜெபிக்க தேவன் கிருபைசெய்தார். பெலவீனமாயிருக்கும் விசுவாசிகள் விரைவில் சுகம் பெறவும், விசுவாசிகள் விசுவாசத்தில் உறுதியாக நிற்கவும் ஜெபிப்போம்.






