தெற்கு மண்டலம்
July 2025
June 2025
தெற்கு மண்டலம்
MAY 2025
தெற்கு மண்டலம்
• மார்ச் 31 முதல் ஏப்ரல் 2 வரையிலான நாட்கள் ஆகாய் ஊழியர்கள் மூலமாக வாரனாசியில் நடைபெற்ற தலைவர்களுக்கான பயிற்சியினை கர்த்தர் ஆசீர்வதித்தார். தலைமைத்துவத்திற்கான பண்புகளைப் பெருக்கிக்கொள்ளவும், வசனத்தின் அடிப்படையில் முன்மாதிரியாகத் தங்களைக் காண்பிக்கவும் பங்கேற்றவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
• பிஞ்சரடிப்பா பணித்தளத்தில் ஏப்ரல் 14 மற்றும் 15 ஆகிய தினங்கள் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 50 விசுவாசிகள் பங்கேற்றனர்.
• போச்ரா பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர்களுக்கான சிறப்புக் கூடுகையில் 65 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். சகோ. சாம் ரிச்சர்டு, சகோதரி பூணம் ஹல்டா மற்றும் சகோதரி ஹெப்சி ஆகியோர் இக்கூடுகையில் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, வாலிபர்களின் வாழ்க்கைக்கேற்ற ஆலோசனைகளை வழங்கினர்.
• வனாஞ்சல் கோட்டத்தின் லோஹிங்கா பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் கூடுகையில் 50 பேர் கலந்துகொண்டு ஆசீர்வதிக்கப்பட்டனர்.
• ராஜ்ஹரா பணித்தளத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற உபவாசக் கூடுகையிலும், தொடர்ந்து, ஜப்லா பணித்தளத்தில் நடைபெற்ற இரவு ஜெபக் கூடுகையிலும் மற்றும் முகமதுகஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் உபவாசக் கூடுகையிலும் பணித்தள மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று, பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர்.
• கடந்த மாதத்தில், 12 பேர் இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, உடன்படிக்கையின் மூலம் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை!
• அன்பரா பணித்தளத்தில் பல்வேறு எதிர்ப்புகளின் நிமித்தம் ஆலய ஆராதனை தடைபட்டதைத் தொடர்ந்து, வீடுகளில் தொடங்கப்படவிருக்கும் ஜெபக்கூடுகைகளுக்காகவும் மற்றும் இப்பணித்தளத்தின் சமுதாயப் பராமரிப்பு மையத்தின் சுற்றுச் சுவர் கட்டுமானப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.
• எதிர்ப்புகளின் மத்தியிலும், லௌரி, ரீவா, உமரியா, கோன் மற்றும் சோப்பன் ஆகிய பணித்தளங்களில், 30 ஆத்துமாக்கள் தங்கள் விசுவாசத்தை அறிக்கையிட்டு கிறிஸ்துவின் மந்தையில் சேர்ந்தனர்; தேவனுக்கே மகிமை!
• பணித்தளங்களில் விசுவாசிகளுக்கு உண்டாகும் நெருக்கங்கள் மற்றும் சவால்கள் மாறவும், எதிர்ப்போர் கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம்.
April 2025
தெற்கு மண்டலம்
• மார்ச் 1 அன்று ஜப்லா மற்றும் சத்தர்பூர் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற இரவு ஜெபக் கூட்டங்களில், 200 பேர் பங்கேற்று, ஊழியத்திற்காகவும், பணித்தளங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர்.
• துசேரா பணித்தளத்தில் மார்ச் 7 மற்றும் 8 ஆகிய தினங்கள் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டங்களில், 150 விசுவாசிகள் பங்கேற்றனர். இக்கூட்டங்களில், சகோ. லெஸ்லின், சகோ. எடி ஜோனத்தான் மற்றும் சகோ. சரவணன் ஆகியோர் 'வேரிலிருந்து கனிகொடுங்கள்" என்ற தலைப்பின் கீழ் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டனர்.
• மார்ச் 8 அன்று முகமத்கஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர்களுக்கான சிறப்புக் கூட்டத்தில் 31 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். இக்கூடுகையில், சகோ. ரிச்சர்டு மற்றும் சகோ. ஜோசுவா ஆகியோர் வேதத்தின் அடிப்படையில் வாலிபர்களுக்கேற்ற ஆலோசனைகளையும் மற்றும் செய்தியையும் அளித்து, அவர்களை ஜெபத்தில் வழிநடத்தினர்.
• ஜப்லா பணித்தளத்தில் மார்ச் 19 அன்று நடைபெற்ற பெண்கள் கூட்டத்தில் 100 பேர் பங்கேற்றனர்; இக்கூட்டத்தில், சகோ. பிரின்ஸ் தேவச் செய்தியினைப் பகிர்ந்துகொண்டார்.
• மார்ச் 20 அன்று முகமத்கஞ்ச், நாகருந்தரி மற்றும் மஜியாவ் பணித்தள விசுவாசிகள் 110 இணைந்து ஓரிடத்தில் தேவனை ஆராதிக்க கர்த்தர் உதவிசெய்தார்; இக்கூடுகையின்போது இயேசுவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 38 பேர் உடன்படிக்கையின் மூலமாக தங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை!
• வனாஞ்சல் கோட்டத்தின் தொர்பா, சர்ஹி மற்றும் கோமோ ஆகிய பணித்தளங்களில் நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகளில், 210 பேர் கலந்துகொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற ஞாயிறுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியினையும் கர்த்தர் ஆசீர்வதித்தார்.
• பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காகவும், விசுவாசிகளின் சுகத்திற்காகவும் மற்றும் ஊழியத்திற்கான தடைகள் நீங்கவும் ஜெபிப்போம்.
March 2025
தெற்கு மண்டலம்
- சோன்பத்ரா கோட்டப் பணித்தளங்களில் நடைபெற்ற பல்வேறு நற்செய்தி மற்றும் சுகமளிக்கும் கூட்டங்களில், அநேகர் இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டதுடன், வியாதிகளிலிருந்தும் அநேகர் விடுதலையடைந்தனர். அத்துடன், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சமாதானப் புருஷர்களுக்கானக் கூடுகையில் 30 பேர் பங்கேற்றனர்; தேவனுக்கே மகிமை!
- மஜியான், நகர்-உண்டாரி மற்றும் முகமத்கஞ்ச் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற உபவாசக் கூட்டங்களில்145 பேர் கலந்துகொண்டு, பணித்தள ஊழியங்களுக்காகவும், தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர்.
- பெத்லா பணித்தளத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமின் வாயிலாக 155 பேர் பயனடைந்தனர்.
- 'ஆயத்தமாகு மற்றவர்களை ஆயத்தப்படுத்து' என்ற கருப்பொருளின் கீழு; கடுவா பணித்தளத்தில் நடைபெற்ற ஊழியர் கருத்தரங்கு மிகுந்த ஆசீர்வாதமாக அமைந்தது. இக்கருத்தரங்கில் 67 ஊழியர்கள் கலந்துகொண்டனர். மேலும், ராஜ்ஹரா பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கான ஒருநாள் சிறப்புக் கூட்டத்திலும் விசுவாசிகள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.
- சத்தாரா மற்றும் ரஹ்மத்பூர் பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களின் மூலமாக 150 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவி செய்தார்.
- மஹராஷ்டிராவில் ஜனவரி 2 முதல் பிப்ரவரி 6 வரையிலான நாட்களில் நடைபெற்ற தொடர் உபவாசக் கூடுகை மிகுந்த ஆசீர்வாதமாக அமைந்தது. இக்கூடுகையில், ஷிராலா மற்றும் குடோலி பணித்தள விசுவாசிகள் உற்சாகமாகக் கலந்துகொண்டு ஜனங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர்.
- உமரியா மற்றும் மணிக்வார் பணித்தளங்களில் கட்டப்பட்டுவரும் ஆலயங்களுக்காகவும், சுகவீனமாயிருக்கும் விசுவாசிகள் விரைவில் குணமடையவும், விசுவாசிகளின் பிள்ளைகளுக்கு ஏற்ற காலத்தில் திருமணம் நடைபெறவும் ஜெபிப்போம்.
FEBRUARY 2025
- கடந்த நாட்களில் சுமார் 4718 பேருக்கு கிறிஸ்துவின் நற்செய்தியினை கைப்பிரதிகளின் வாயிலாகவும் மற்றும் நற்செய்தி அறிவிப்பின் மூலமாகவும் பகிர்ந்துகொள்ள கர்த்தர் உதவிசெய்தார்.
- வனாஞ்சல் கோட்டத்தில் நடைபெற்ற சுவிசேஷக் கூட்டங்களின் மூலமாக பணித்தள மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது.
- ஜார்க்கண்ட் மாநிலத்தின் லோஹிங்கா மற்றும் புர்குண்டா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டங்களில், 200-க்கும் மேலானோர் பங்குபெற்று நற்செய்தியைக் கேட்டனர்.
- டாட்டா பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கான சிறப்புக் கூடுகையில், 45 விசுவாசிகள் பங்கேற்றனர். விசுவாசத்தில் பெலப்படவும், கிறிஸ்துவுக்காகச் செயல்படவும் மற்றும் தங்கள் அர்ப்பணிப்பினைப் புதுப்பித்துக்கொள்ளவும் இக்கூடுகை வகைசெய்தது.
- முண்டா பழங்குடி சமுகத்தைச் சேர்ந்த 28 இளைஞர்களைச் சந்திக்கவும் மற்றும் கிறிஸ்துவின் அன்பினை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் கர்த்தர் கிருபை பராட்டினார்.
- பணித்தளங்களில் செய்யப்பட்ட சிறுவர் ஊழியங்களின் மூலம், சிறுவர் சிறுமியர்களுக்கு பாடல்கள், வேதாகமச் சம்பவங்கள் மற்றும் மிஷனரிச் சாட்சிகளின் வாயிலாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும், மற்றும் அவர்களது பெற்றோர்களுக்காக ஜெபிக்கவும் கர்த்தர் கிருபைசெய்தார்.
- சத்தர்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற முழு இரவு ஜெபத்தில் 50 பேரும் மற்றும் முகமத்கஞ் பணித்தளத்தில் நடைபெற்ற சிறப்புக் கூடுகையில் 150 விசுவாசிகள் பங்கேற்று கர்த்தருடைய வசனத்தைக் கேட்டனர்.
- உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவோடு தங்களை இணைத்துக்கொண்ட விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் உறுதியாக நிற்கவும், சுகவீனமாயிருக்கும் பணித்தள மக்களுக்காகவும் மற்றும் பணித்தளங்களில் நடைபெறவிருக்கும சிறுவர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.